சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள்.

                            சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள்.

        சாம்பிராணி காட்டுவது என்பது நமது நாட்டில் தொன்று தொட்டு இருக்கும் ஒரு வழக்கம். அது எந்தந்த நாட்களில் இறைவனுக்கு காட்டினால் எந்தெந்த பலன்கள் கிடைக்கும் என்பதனை சொல்லும் ஒரு கட்டுரை தொகுப்பு தான் இது.


  • ஞாயிறு அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் - ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்.
  • திங்கள் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.


  • செவ்வாய் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன் நிவர்த்தி போன்ற பல நல்ல பலன்கள் உண்டாகும்.


  • புதன் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல் போன்ற பல நல்ல பலன்கள் உண்டாகும்.


  • வியாழன் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், அத்துடன் சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.


  • வெள்ளி அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் - லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி போன்ற பல நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும்.


  • சனி அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் போன்றோரின் அருள் கிட்டும்.

Comments