தாது பலம்பெற கல்யாண பூசணி லேகியம்:

தாது பலம்பெற கல்யாண பூசணி லேகியம்:

நன்கு முற்றிய கல்யாண பூசணிக்காயிலிருந்து 250 மி.லி சாறு எடுக்கவும் .

1.   பாதாம் பருப்பு – 10கிராம்
2.   பிஸ்தா பருப்பு – 10கிராம்
3.   அக்ரூட் பருப்பு– 10கிராம்
4.   சாரப் பருப்பு– 10கிராம்
5.   கசகசா – 10கிராம்
6.   பாதாம் பிசின் – 10கிராம்
7.   வேலம் பிசின் -10 கிராம்
8.   ஆவாரம் பிசின் -10கிராம்
9.   முருங்கை பிசின் -10கிராம்

மேற்கண்ட பருப்பு மற்றும் பிசின் வகைகளை பொடித்து , சலித்து வைத்துக்கொள்ளவும்.

கல்யாணப்  பூசணிச் சாற்றில் 500 கிராம் கற்கண்டு , ½ லிட்டர் பசும்பால் சேர்த்து கரைத்து அடுப்பேற்றி , சிறுதீயாய் எரிக்கவும் . பாகுபதத்தில் முன்பு பொடித்து வைத்துள்ள பருப்பு , பிசின் வகைகளை முறைப்படி கலந்து கிண்டி கீழிறக்கவும் . லேகியம் ஆறிய பின் 250 கிராம் நெய் சேர்த்து கிளறி பத்திரப்படுத்தவும் .

தினசரி காலை , இரவு பாலுடன் 5 கிராம் அளவு லேகியம் சாப்பிட உடல் உஷ்ணம் தணிந்து , தேகம் வலுத்து தாது பெருகும் . அதி உஷ்ணம் எனப்படும் வெட்டை அதிகரித்த நிலையில், உயிர்த்துளியில் (விந்து )  உள்ள அணுக்கள் அசையும் தன்மையை இழக்கவும் , மடிந்து போகவும் விந்து நீர்த்து வீணாகிவிடவும் வாய்ப்பிருந்தால் மேற்கண்ட லேகியம் ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய மருந்தாகும் .

Comments