ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது...
ஒரு
நாள் அவனுடைய தந்தை அவனிடம் ஒரு சுத்தியலும், நிறைய
ஆணிகளையும் கொடுத்தார்...
"இனிமேல்
உனக்கு கோபம் வரும் போதெல்லாம், வீட்டின் பின்புற சுவற்றில் ஆணி அடித்துவிடு என்று
கூறினார்."
அவன்
முதல்நாள் 10 ஆணி அடித்தான்...
மறுநாள்
7 ஆணி அடித்தான்...
பின்பு
5, 2 என படிப்படியாக
ஆணி
அடிக்க...
அவனுடைய
கோபம் குறைந்தது. ஒரு
நாள் ஒரே ஒரு ஆணி
அடித்தான்.
அவன்
தந்தையிடம், நான் இதுவரை 45 ஆணிகள்
அடித்து உள்ளேன்...
இனி
கோபம் வராது என்று அவரிடம் கூறினான். தந்தை கூறினார்,
இனிமேல்
கோபம் வராத நாளில் ஒவ்வொரு
ஆணியாக பிடுங்கி விடு என்றார்...
45 நாளில்
தான் அடித்த ஆணிகள் அனைத்தும் பிடுங்கப்பட்டுவிட்டன என பெருமையுடன் தந்தையை
அழைத்து காட்டினான்...
உடனே
அவன் தந்தை கூறினார்,
"ஆணிகளை
பிடுங்கிவிட்டாய், ஆனால், சுவற்றில் ஏற்பட்ட ஓட்டைகளை என்ன செய்வாய்?
உன்
கோபம் இது போல பலரின்
இதயத்தை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? என்றார்."
அந்த
இளைஞன் வெட்கித் தலை குனிந்தான்.
Comments
Post a Comment